புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 3 )



முன் குறிப்பு:
** படத்துக்கும் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

1,எப்புடி!!!!!

அதோ..பாருங்கள்..!
தூ...ரத்தில்!
சிறகுவிரித்துப் பறக்கிறது…
- -
உங்கள் சிந்தனை..!
(எனது கற்பனையும்)
:)

**********

2,நினைவிருக்கட்டும்!

துரத்திக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொருவரையும்
குறிப்பிட்ட தூரத்தில்
மரணம்..!

*********

3,பனித்துளி!

சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!

*********

4,வீண்!

ஓரிடத்துச்செல்வம்
உதவுவதில்லை
யாருக்கும்..
கடல்நீர்!

***********


அம்புட்டுதேன்..!!!!!!

8 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 31 மே, 2010 அன்று AM 11:43  

எல்லாமே மிகவும் அருமை... மிகவும் ரசிக்கும் படியாக...

//பனித்துளி!

சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!//

எனக்கு ரொம்ப பிடித்தது...

ஹேமா 1 ஜூன், 2010 அன்று AM 1:25  

அண்ணாமலை....சிந்தனைச் சிதறல்கள் எல்லாமே அழகு."பனித்துளி"ஏனோ இன்னும் மறையாமல்!

ரோஸ்விக் 1 ஜூன், 2010 அன்று PM 5:28  

சிதறல்கள் அற்புதமா இருக்கு நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் ஊர்க்காரனின் வாழ்த்துக்கள்.

தங்களை பதிவுலகின் பிற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி...

http://blogintamil.blogspot.com/2010/06/new.html

அண்ணாமலை..!! 2 ஜூன், 2010 அன்று AM 10:43  

@ தஞ்சை.வாசன்

ரொம்ப நன்றிங்க நண்பரே!


@ ஹேமா

ரொம்ப நன்றிங்க ஹேமா!


@ ரோஸ்விக்

எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி ரோஸ்விக்!

vasan 2 ஜூன், 2010 அன்று PM 1:10  

சூரிய‌னை எதிர்க்க‌ம‌ட்டும‌ள்ள‌,
ஆவியாகும் வ‌ரை, சூரிய‌னையே முழுங்கியிருக்கும்
அத‌னுள் பிம்ப‌மாய், ச‌ரிதானே? அண்ணாம‌லை!

அண்ணாமலை..!! 2 ஜூன், 2010 அன்று PM 4:22  

@ vasan!

ரொம்ப நன்றிங்க.
உங்க கற்பனை இன்னும்
நல்லாயிருக்கு!

அன்புடன் மலிக்கா 3 ஜூன், 2010 அன்று AM 10:04  

அப்பப்பா மூன்றுமே முத்தான முத்துக்கள் அசத்திட்டீங்க அண்ணாமலை..

அண்ணாமலை..!! 3 ஜூன், 2010 அன்று PM 7:47  

@ அன்புடன் மலிக்கா

நீங்க சொன்னா சரிதான்!
ரொம்ப நன்றிங்க அன்புடன் மலிக்கா!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!