புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு (ஆடி - 18)



தந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!

பார"தீ"!!!!!! உம்மை வணங்குகிறோம்!

இதைவிடவும் சுதந்திர தாகத்தை ஒருவன் தன்னுடைய
எண்ணங்களில்,தெளிவான பாடல்களில் வெளிப்படுத்த முடியுமா??

*****************************


இப்போ,
வெட்டு ஒண்ணு - துண்டு ரெண்டு!

பாரதி..
பாக்களில் ரதியும்..!
பார்க்கையில் தீயும்..!

*******
பாரதி..
விடுதலைக்கும்..!
விடு தளைக்கும்.!

*******
பாரதி..
கவிதைக்கும்.. - அவன்
கவி தைக்கும்!

*******
பாரதி!
கலை வா நீ!
சில களவானிகளும்.!

*******
பாரதி..
வீணை மீட்டவும்..!
வீட்டை மீட்க வழியற்றும்.!

*******

பாரதி..
பாருக்கே பாக்கொடைஞன்..
பாடைக்குப் பதினோரே பேர்!

*******
உண்மைதானே ..!
நன்றிங்க!

6 கருத்துகள்:

Chitra 3 ஆகஸ்ட், 2010 அன்று PM 1:06  

பின்னிட்டீங்க...... பாராட்டுக்கள்!

தூயவனின் அடிமை 3 ஆகஸ்ட், 2010 அன்று PM 4:46  

அருமையான வார்த்தைகள்.

அண்ணாமலை..!! 4 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:37  

@ Chitra,

நீங்க சொன்னா சரிதான்!


@ இளம் தூயவன்,

வெகு நன்றிங்க இளம் தூயவன்!

அண்ணாமலை..!! 7 ஆகஸ்ட், 2010 அன்று PM 6:30  

ரொம்ப நன்றிங்க!

Ananthi (அன்புடன் ஆனந்தி) 9 ஆகஸ்ட், 2010 அன்று PM 9:36  

பாரதி பற்றிய வரிகள்.. அருமை :-))

வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டு..
பொருத்தமான தலைப்பு..!

அண்ணாமலை..!! 10 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:52  

அப்படியா?
ஆனந்தமுங்கோவ்!
:)

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!