புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஏ! ஏ! அற்ப மானிடா!!!!




கரும் படியிலும்,
நடந்தே விரைகிறான்
நாகரிக மனிதன்! (escalator!)

காலனைத் துரத்திப்
பிடித்திட இத்தனை
வேகமென் றெண்ணிடுவேன்!

நாக ரீகம்
எனவே உரைத்து
நலங்கள் பலதொலைப்பான்!

கால மாற்றம்
எனும் பெயராலே
களங்கம் பலபுரிவான்!

வன்..

ன்றை நினைத்து
நேற்றினைத் தொலைத்தான்
வாழவும் மறந்துவிட்டான்!

தோ..

நாளையை நினைத்து
இன்றைத் தொலைக்கிறான்
நன்மைபல என்பான்!

நாளை எனவரும்
நாளைக் காணாது
நாளை இறந்திடுவான்!

ல்லைக் காட்டி
பணமும் சிரிக்க!
பாதாளம் சென்றிடுவான்

நில்லென ஒருநொடி
மனதை நிறுத்த
மறந்தவனும் ஆனான்!

ல்லை யெனஎவர்
வந்திடும் போதும்
இல்லை எனவுரைத்தான்!

வன் ...

நினைப்பால் எதையும்
வாழ்வான்! ஆனால்..
நிஜத்தில் வாழ்ந்துவிடான்!

ற்பனை தனிலே
காலம் கரைத்தான்
காலன் தனைஅடைந்தான்!

த்துவம் பலவும்
பேசுவன் எதையும்
தாரை வார்த்துவிடான்!

த்தரை மீதில்
இதுஎன்ன வாழ்வென
இழித்தும் பேசிடுவான்!

முத்தங்கள் கன்னியர்
முகத்தில் தந்ததும்
முழுதும் மறந்திடுவான்!

ழுகை கவலை
கோபம் என்றே
அருமை தொலைத்திடுவான்!

வன்தான் என்றும்
இனிமை அறியாது
இறப்பான் அற்ப மானுடனே!!!!!


***************

சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!



னிதரை மனிதர் கொல்லும் நோய்க்கு
மருந்தொன் றிங்கு வேண்டும்!
மீனவர் வாழ்வும் மானிட வாழ்வென
மாற்றார் புரிந்திட வேண்டும்!

புனிதர்கள் என்றே யாரும் இங்கிலர்
புரிந்திடல் நன்றே யாகும்!
குனிந்திடக் குனிந்திடக் கொட்டுதல் முறையோ?
கேட்கவும் நாதியு மிலையோ?

திரிகள் என்றே அழைப்பவர் கூட
இப்படிச் செய்திட மாட்டார்!
புதிராய் இருக்குது புரியவும் மறுக்குது
பூனைக்கு மணியும் இலையோ?

னியொரு மனிதனுக் குணவில் லையெனில்
செகத்தினை அழித்திடச் சொன்னார்!
இனியொரு மனிதன் அழிந்திடும் போதும்
இப்படித் தானா இருக்கும்?

ட்டுகள் மட்டும் போதுமிங் கென்றால்
ஓலம் தொடர்ந்திடச் செய்யும்!
வீட்டுக்குள் துயரம் வந்ததாய் நினைத்து
விரட்டிட முனைவோம் வாரீர்!

நமது மீனவர்களுக்காக நாம் நகர்த்தும் ஓர் கோரிக்கைக்கப்பல்!

*****

தொடுப்பு:

சேதுவை மேடுறுத்த
செங்கற்கள் தேவையில்லை!
செத்த மீனவனின்
உடல்களே போதுமானது!

ஓர் நிலவும் - சிறுவனும்!



நிலவும் இவனும் நித்தம் மகிழ்ந்தே
...உலவித் திரிவர் உயர்வாய் வானில்!
நீல வண்ண நிலம்போல் வானம்
...கோல வடிவாய்க் கரையும் மேகம்!
தேவதை போலே திரியும் நிலவு
...மாவதை இவனும் மறைத்ததை அறியா!
பெருமை மிகவும் பூண்டே, வானப்
...பருந்தைக் கடந்தும் பறக்கும் நிலவுக்
கெத்தனை பெரிய இறகு என்றே
...இத்தனை நாளாய் எண்ணியும் வந்தான்!
எழுந்து சென்று ஏதோ ஏதோ
...கொழுந்து எரியக் கலந்து பேசி,
நிலவு சிரித்தால் நிதமும் சிரிப்பான்
...நிலவழு தால்இந் நீசனும் அழுவான்!
பழுதைப் போலே பாலனை எண்ணி
...கழுத்தைக் கூடவும் காட்டிட இயலா
வெண்ணி லாவிடம் வேண்டிப் பேசிட
...கண்ணையும் அதுவோ காட்டிட மாட்டா!

திரும்ப நினைவைத் தீண்டிய போதே
...விருப்ப மின்றி வெண்ணிலா சொன்னது!
உனையும் பார்ப்பேன் உலகில் நானும்
...இனியும் பேசு என்றும் கேட்பேன்!
இரும்பால் செய்த இதயம் அதற்கு
...துரும்பாய் இளைத்தும் துணைவர வில்லை!
இவனுக் கோபனி இதழென இதயம்!
...குவலயப் பனிபோல் 'களுக்'கெனக் கரையும்!

இறகு மட்டுமே இருப்பதை அறிந்தவன்
...உறவு வேண்டியே ஒருயுகம் துடித்தவன்!
அலகும் உண்டு அப்பற வைக்கென
...சிலபொழு தேனும் சிந்தித் திருந்தால்!
*கற்றவர் மறுக்கும் கலகம் இதனில்
...ஒற்றனைப் போலே ஒளிந்திட மாட்டான்!


தொடுப்பு:
*புதுக்கவிதை எனப் பெயரை வைத்துவிட்டு இதுபோல் எழுதுவதற்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?:)
*"கற்றவர்" - என்றால் "அனுபவப்பட்டவர்கள்" என்று கொள்ளலாம்.

களவானி! - ஓர் ஓவியம்!




திவுகள் இட்டு பலநாட்கள் ஆகிவிட்டதால் இடைவெளியை நிரப்பிட இந்தப் பதிவு!
சில படங்கள் மட்டுமே ஓவியமாவதற்குத் தகுதியானவை.(அனைத்தையுமே வரையமுடியும் என்றாலும் வெகுசில தான் வரையவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்!
அந்த வகையில் இந்தக் களவானி என்னை ரொம்பவே கவர்ந்த படம்.)
இறுதிக்கட்டத்தில் பொறுமையில்லாததால் ஓவியத்தின் பின்புலங்கள் ரசிக்கமுடியாததாக இருக்கலாம்.
இருப்பினும் உங்களின் பார்வைக்கு!

இராஜராஜசோழனை விரைவில் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்க்கலாம்.
அதுவரை அடியேனின் அன்பு வணக்கங்கள்..!

நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
-கவியரசர்

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2011 (4)
    • ▼  மார்ச் (1)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!