புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஏ! ஏ! அற்ப மானிடா!!!!




கரும் படியிலும்,
நடந்தே விரைகிறான்
நாகரிக மனிதன்! (escalator!)

காலனைத் துரத்திப்
பிடித்திட இத்தனை
வேகமென் றெண்ணிடுவேன்!

நாக ரீகம்
எனவே உரைத்து
நலங்கள் பலதொலைப்பான்!

கால மாற்றம்
எனும் பெயராலே
களங்கம் பலபுரிவான்!

வன்..

ன்றை நினைத்து
நேற்றினைத் தொலைத்தான்
வாழவும் மறந்துவிட்டான்!

தோ..

நாளையை நினைத்து
இன்றைத் தொலைக்கிறான்
நன்மைபல என்பான்!

நாளை எனவரும்
நாளைக் காணாது
நாளை இறந்திடுவான்!

ல்லைக் காட்டி
பணமும் சிரிக்க!
பாதாளம் சென்றிடுவான்

நில்லென ஒருநொடி
மனதை நிறுத்த
மறந்தவனும் ஆனான்!

ல்லை யெனஎவர்
வந்திடும் போதும்
இல்லை எனவுரைத்தான்!

வன் ...

நினைப்பால் எதையும்
வாழ்வான்! ஆனால்..
நிஜத்தில் வாழ்ந்துவிடான்!

ற்பனை தனிலே
காலம் கரைத்தான்
காலன் தனைஅடைந்தான்!

த்துவம் பலவும்
பேசுவன் எதையும்
தாரை வார்த்துவிடான்!

த்தரை மீதில்
இதுஎன்ன வாழ்வென
இழித்தும் பேசிடுவான்!

முத்தங்கள் கன்னியர்
முகத்தில் தந்ததும்
முழுதும் மறந்திடுவான்!

ழுகை கவலை
கோபம் என்றே
அருமை தொலைத்திடுவான்!

வன்தான் என்றும்
இனிமை அறியாது
இறப்பான் அற்ப மானுடனே!!!!!


***************

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2011 (4)
    • ▼  மார்ச் (1)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!